Monday, February 16, 2009

அய்யம்பாலயத்துகாரரின் காமிக்ஸ் ஆராய்ச்சி

தமிழ் கூறும் நல்லுலகில் 'காமிக்ஸ்' என்றாலே அது சின்னப்பசங்க சமாச்சாரம் என்ற எண்ணம் ஆழ வேருன்றி உள்ளது. இங்கு மட்டுமல்ல உலகெங்கும் அப்படிதான் இருந்திருக்கிறது. காலப்போக்கில் அந்த தவறான எண்ணம் மேலைநாடுகளில் மாறி விட்டிருக்கிறது. இங்கு மட்டும் காமிக்ஸ் வாசிப்பு அங்கீகரிக்கப்படாமலேயே தொடர்கிறது.

உண்மையில் காமிக்ஸ் வடிவில் செய்தி சொல்வது என்பது நமது ஆதி முன்னோர்களிடம் இருந்தே பரிணமித்து வந்திருக்கிறது. குகைச்சுவர்களில் தங்கள் அனுபவத்தில் கண்ட நிகழ்வுகளை குறியீடுகளாக வரைய தொடங்கிய மனிதன் பின்னர் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சித்திரங்களாக வரைய தொடங்கினான். இதுவே காமிக்ஸ் வடிவத்தின் தொடக்கம் என்று கூறலாம்.

மேலும் படிக்க...
Blog Widget by LinkWithin